tamilnadu

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் கோபால் பரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்குவிரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகள் தங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்தனர். இதனையறிந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் பதில் தாக்குதல்நடத்தினர்.இரு தரப்பினருக்கும் இடையே நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.